close
Choose your channels

பயிற்சி வகுப்பு நடத்தி முதல்வர் நிவாரண நிதி கொடுத்த பிரபல இயக்குனர்!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசு கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திரை உலக பிரமுகர்கள் பலர் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்தரன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கி உள்ளார். இந்த தொகைக்கான காசோலையை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதியிடம் அவர் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவும் எண்ணத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதில் கலந்துகொண்டோர் வழங்கிய கட்டண தொகை மொத்தமாக ரூபாய் 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்

இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மோத்தி, மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்களுக்கும், என் உதவியாளர் வினோத், வைசாலி, அவர்களுக்கும் மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்ப கலைஞர்கள் சரத் நிவாஸ், சரவணன், சூரியா தேவன் அவர்களுக்கும் முக்கியமாக இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச் செய்த அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளத்தினர்களுக்கும் ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று இயக்குனர் சுசிந்திரன் தெரிவித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.