close
Choose your channels

யாரும் பயப்பட வேண்டாம், வதந்திகளை நம்பாதீர்கள்: இயக்குனர் சுசீந்திரன்

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் சுசீந்திரன்தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ’பிச்சைக்காரன் 2’ என்ற படபிடிப்புக்காக மலேசியா சென்று இருந்தபோது படப்பிடிப்பின் போது விபத்தில் காயம் அடைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி, தற்போது சென்னை வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ’பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார், அவரை இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள், கூடிய சீக்கிரம் ரசிகர்களிடம் அவர் வீடியோ மூலம் பேசுவார், ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விஜய் ஆண்ட னி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos