சுசீந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்த சுசீந்திரன் அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலினால் காதல் செய்வீர்', பாண்டிய நாடு', ஜீவா' உள்பட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாவீரன் கிட்டு' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சற்று முன் அவர் தனது புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'அறம் செய்து பழகு' என்ற சுசீந்திரனின் அடுத்தபட டைட்டிலை பிரபல நடிகர் ஜெயம் ரவி சற்றுமுன் வெளியிட்டார்.

சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் சந்தீப்க்கு ஜோடியாக மெஹரீன் என்பவர் நடிக்கின்றார். இவர் 'கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா' என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெண்ணிலாக் கபடிகுழு' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி எழுதுகின்றனர். இந்த படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

More News

விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' படத்தின் பூஜை தேதி மற்றும் நேரம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதியும், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவும் முதல்முறையாக இணையும் திரைப்படம் '96'

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. மொத்த எண்ணிக்கை 9 ஆனது

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சற்று முன்னர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது...

சசிகலா வழக்கு தீர்ப்பு எதிரொலி: ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்பட மூவர் சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 அறிவிக்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.