'திருட்டுப்பயலே' இயக்குனரின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

’திருட்டுப் பயலே’ மற்றும் ’திருட்டுப் பயலே 2’ உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன் தற்போது ’திருட்டுப்பயலே 2’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். வினித் குமார் சிங் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இயக்குனர் சுசி கணேசனின் அடுத்த படம் மெகா பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு குறித்து ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த மெகா பட்ஜெட் படத்தில் முன்னணி நடிகர்கள் ஒரு சிலர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இயக்குனர் சுசி கணேசனின் மெகா பட்ஜெட் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே.

முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி

'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்