close
Choose your channels

கார் வேண்டாம், வேறு ஏதாவது கொடுங்கள்: முதல்வருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு அளிப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் பரிசு அளிக்கலாம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய இயக்குநர் தங்கர்பச்சான், ‘காரின் தொகைக்கு ஈடாக உழவுக்கருவிகள், மாடுகள், நிலம் போன்றவற்றை தந்து வீரர்கள் வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தலாம் என்றும், காரை வைத்துக்கொண்டு பெட்ரோல் டீசல் போடவே வாழ்நாள் முழுவதும் அவர்கள் போராட வேண்டியிருக்கும் என்றும், தயவுசெய்து முதலமைச்சர் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தங்கர்பச்சானின் இந்த வேண்டுகோள் பரிசீலனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.