வெங்கட்பிரபு மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஷிவானி கொடுத்த அன்பு பரிசு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபுவின் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஷிவானி மற்றும் விக்ருதி குக்கு ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஷிவானி தனது ஐந்து வயதிலேயே ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் இளைய மகள் விக்ருதி பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்த வெங்கட்பிரபு, ‘எனது லிட்டில் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கூறியுள்ளார். மேலும் தனது மூத்த மகள் ஷிவானி இந்த பிறந்தநாள் கேக்கை தயார் செய்ததாகவும் வீட்டிலேயே செய்த கேக் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கையின் பிறந்த நாளுக்கு ஷிவானி செய்த அன்புப்பரிசு இந்த கேக் ஆகும். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
 

More News

கணவர், குழந்தையுடன் இருக்கும் விஜய்யின் 'யூத்' பட நாயகி: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'யூத்'. வின்சென்ட் செல்வா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக சாஹின்கான் என்பவர் நடித்திருந்தார்.

கொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்!

கொரோனா நிதியாக தனது திருமணத்திற்கு வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண் குறித்து முதல்வர் ஸ்டாலின்

3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 21-ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார்.

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார் வேண்டாம்: டிஜிபியின் உத்தரவுக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் நன்றி!

சாலை பாதுகாப்பு பணிகளில் இனி பெண் போலீசாரை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி