close
Choose your channels

'மாநாடு 2' படத்தில் எஸ்.ஜே.சூர்யா உண்டா? வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த படம் நல்ல வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று டுவிட்டர் ஸ்பேஸில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அப்போது அவர் ’மாநாடு 2’பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிவித்தார்.

’மாநாடு’ படத்தின் கிளைமாக்ஸில் சிம்புவுக்கு டைம்லூப் காட்சி வருவதுபோல் வைத்திருக்கிறோம். சிம்புவுக்கு டைம்லூப் வந்தால் எஸ்ஜே சூர்யாவுக்கும் டைம்லூப் வரும். அதனால் தனுஷ்கோடியும் மீண்டு வருவார். ’மாநாடு 2’பணிகளை விரைவில் தொடங்குவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

’மாநாடு’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா இறந்து விடும் வகையில் காட்சிகள் அமைந்தாலும் டைம்லூப் படி அவர் மீண்டும் ’மாநாடு 2’படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் ’மாநாடு 2’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.