close
Choose your channels

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. விக்னேஷ் சிவனின் தத்துவங்கள்..

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில தத்துவங்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜீத் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படத்திலிருந்து அவர் விலகி விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில தத்துவங்களை பதிவு செய்துள்ளார். அந்த தத்துவங்கள் இதோ:

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. ஆனால் ஒரு நாள் அந்த தடங்கல் எல்லாம் அப்படியே பொடிப்பொடியாய் உடைந்து.. என்ற திரைப்பட வசனத்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

அதேபோல், ‘ இந்த உலகில் செய் அல்லது செத்துமடி என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை, உங்கள் மன ஆரோக்கியத்துக்கு எது உகந்ததோ அதை செய்தால் போதும்’ என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்த வீடியோவையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

மேலும் தோனி ஒரு பேட்டியில், ‘ கிரிக்கெட் விளையாட்டு என்பது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. ஒரு நாள் சதம் அடைத்து மகிழ்ச்சியாக இருப்போம், இன்னொரு நாள் ஜீரோ ரன் அடுத்து வருத்தமாக இருப்போம், வாழ்க்கையும் அப்படித்தான், ஏற்ற இறக்கத்துடன் இருக்கும், அந்த ஏற்ற இறக்கத்தை நாம் சமப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய வீடியோவையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட தத்துவங்களில் இருந்து ’அஜித் 62’ படம் தனது கையை விட்டு போனாலும் தனக்கு இன்னொரு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும், வாழ்க்கையில் உள்ள ஏற்ற இறக்கம் போலவே சினிமாவிலும் ஏற்ற இறக்கம் உண்டு என்றும் அதை தன்னால் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர் இருப்பதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.