அஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

அஜித் நடித்த ’கிரீடம், விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கொரொனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னர் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபாலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமான நிலையில் இன்று காலை அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை இயக்குனர் விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ’நான் இப்போது பெரியப்பா ஆகிவிட்டேன். ஆம், இயக்குனர் விஜய் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கோலிவுட் திரையுலகினர் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

தமிழகத்திலும் வெட்டிக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பரபரப்பை போலவே வெட்டுக்கிளிகள் குறித்த பரபரப்பான செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில் வட மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களை தாக்கி

கொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை

இந்தியா உள்பட உலகமெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எதிர்பாராத பல விளைவுகளை கொண்டு வந்து விட்டது. இதுவரை மனிதர்கள் சந்திக்காத பல நிகழ்வுகளை சந்தித்து வருகின்றனர்

தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள் 

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பிரச்சினை மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் விவசாயிகளை கண் கலங்க வைத்த செய்கிறது

பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்புக்கு என்ன காரணம்??? இந்தியாவில் இதன் தாக்கம் எப்படியிருக்கும்???

பாலைவன வெட்டுகிளிகள் தற்போது இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வின் உணவு வழங்கல் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை

இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பிரச்சினை தலைவிரித்து ஆடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது