close
Choose your channels

இன்ஸ்டா மூலம் ஆசை வார்த்தை...! சிறுமியை ஏமாற்றிய இயக்குனர் கைது...!

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

17 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி, பாலியல் தொல்லை செய்த இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிக்கு 17 வயதில் ஒரு பெண் உள்ளார். இவர் ஆன்லைன் வகுப்பு படிக்கும்போது இன்ஸ்டா மூலம், மதுரவாயலைச் சேர்ந்த சத்யபிரகாஷ் என்ற இயக்குனர் அறிமுகமாகியுள்ளார். சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். ஒன்றும் அறியாமல் இவனை நம்பி சென்ற சிறுமிக்கு அங்கு, அதிர்ச்சியே காத்திருந்தது. வீட்டில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளான் இந்தக் கொடூரன்.

இந்நிலையில் சத்யபிரகாஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், சத்யபிரகாஷ் சினிமாவில் இயக்குனராகவும், தற்போது சமுதாயம் என்ற படத்தை இயக்கி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சத்யாவை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இயக்குனர் கடந்த 2011-இல் சீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு 7 வயதில் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சத்யா இதுபோன்ற சில்மிஷ வேளைகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.