நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

பூமியில் இருந்து 90 ஒளியாண்டு தொலைவில் உள்ள புதிய கோள் TOI-1231b ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் பூமியை விட கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் பூமியைப் போன்றே புதிய கோளிலும் சீதோஷ்ண நிலை இருக்கலாம் என்றும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் வானியல் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அப்படியொரு ஆய்வில் தற்போது பூமியை விட பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோள் பார்ப்பதற்கு நெப்டியூன் போன்றே இருப்பதாகவும் அந்த கோளில் நீர் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

அதோடு புதிய கோளில் குளிர்ச்சி தன்மை பொருந்தி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறும் நாசா விஞ்ஞானிகள் ஏறக்குறைய பூமியை ஒத்த சீதோஷ்ண நிலையை அந்த கோளில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியிட்டு உள்ளனர். நாசா விஞ்ஞானிகள் புதிய கோள் கண்டுபிடித்ததை அடுத்து உலக விஞ்ஞானிகள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் புதிய கோள் குறித்த ஆய்விலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

More News

டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க்-அவுட் செய்யும் ரித்திகாசிங்: வைரல் வீடியோ

பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவர்,

நாங்கள் மூவரானோம்: மகத், குழந்தையுடன் பிராச்சி மிஸ்ரா பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் அறிவித்திருந்த மகத்,

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகர் சார்லி: காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி.

கோவையில் 3-ஆம் அலை...! வாட்ஸ்-அப் வதந்தியால் அலறும் மக்கள்.....!

கோவை மாவட்டத்தில் மூன்றாம் அலை துவங்கி விட்டதாக, பொய்யான செய்தி வாட்ஸ்-அப்பில் பரவியதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்...!

பழனியின், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.