அப்பல்லோவில் ஜெ-சசி பேசிய வீடியோவை வெளியிடுவேன். திவாகரன் மகன் மிரட்டல்

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

அதிமுக கட்சியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மூத்த அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர். இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் உரையாடிய வீடியோ ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் அந்த வீடியோ வெளிவந்தால் பலருடைய சுயரூபம் தெரியவரும் என்றும், அதை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை…காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள், அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்

இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்…சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்

ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்

உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்…?

P.H.பாண்டியன்,மனோஜ்பாண்டியன்,ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்…?
அந்த நாள் மிக விரைவில்….

இவ்வாறு ஜெயானந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா இல்லை, அவருடைய புகைப்படமோ, வீடியோவோ இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை கைவிரித்த நிலையில் இவருக்கு மட்டும் எப்படி அந்த வீடியோ கிடைத்தது எப்படி? என்பது புரியாத மர்மமாக உள்ளது. சசிகலா குடும்பத்தினர்களுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க வெடிக்க பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கேட்டு குஷ்பு நீதிமன்றத்தில் மனு

பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தனக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது...

'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு விஜய் உதவி

விஜய், சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று. இன்று பிரபல இயக்குனராக இருக்கும் எழில் இயக்கிய முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது...

நயன்தாராவுடன் சரவணா ஸ்டோர் சரவணன் நடிப்பது உண்மையா? திரையுலக பிரபலம் விளக்கம்

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகிலும், செய்தி இணையதளங்களிலும் பரபரப்பாக வெளிவந்த செய்தி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்பதும் அவரது முதல் படத்தில் நயன்தாரா நடிப்பார் என்பதும்தான்...

அஜித்தின் தெறிக்க வைக்கும் 'விவேகம்' பட ஸ்டில்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படபிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...