close
Choose your channels

தொடர் மிரட்டல் எதிரொலி: 'கக்கூஸ்' இயக்குனர் திவ்யபாரதி திடீர் மாயம்

Saturday, August 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கக்கூஸ்' என்ற ஆவண பட இயக்குனரும் சமூக போராளியுமான திவ்யபாரதி சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் அவர் தமிழகத்தை விட்டே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக சமீபத்தில் மதுரையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் திவ்ய பாரதிக்கு மர்ம போன்கள் பல வருவதாகவும், அதில் முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மிரட்டல் வந்ததால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் இருக்கும் இடம் அவருக்கு மிக நெருக்கமான பத்து பேர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவர் தற்போது செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் போன் மூலம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திவ்யபாரதி, தன்னை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அடிக்கடி போன் செய்து மிரட்டி வருவதாவும் அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் முகத்தில் ஆசிட் வீசிவிடுவோம் என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போலீஸாரிடம் தனக்கு வரும் மிரட்டல் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.