டெல்லியில் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

தமிழக விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக டெல்லியில் வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பாதி மீசையை எடுப்பது, தரையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்வது, ஒப்பாரி வைப்பது, அரைநிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற பலவிதங்களில் விவசாயிகள் போராட்டம் செய்த போதிலும் இன்னும் மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இந்த நிலையில் இன்று அடுத்தகட்டமாக தரையில் மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி விவசாயிகளுடன் விவசாயியாக பிரேமதாவும் மண்சோறு சாப்பிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, 'விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கே தலைகுனிவு என்று கூறிய அவர், 'தேசிய நெடுஞ்சாலைகள் போல், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பல ஆண்டுகளாக சரியான நிர்வாகம் இல்லாததால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரினால்தான் வறட்சியில் இருந்து விடுபட முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளல&

ராதிகாவின் ராடன் மீடியாவில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர்...

இன்று முதல் 'வடசென்னை', வெள்ளி முதல் 'பவர்பாண்டி'

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

கணவர் அழகாக இல்லை. திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி

'கொலையும் செய்வாள் பத்தினி' என்று பழைய பழமொழி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...