வைகோவை கட்டியணைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

அரசியலில் கருத்துவேறுபாடு அதிகம் இருந்தாலும் பொது இடத்தில் சந்திக்கும்போது நாகரீகமாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. அவ்வாறான சந்திப்பில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடப்பதுண்டு. அந்த வகையில் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்த கவிகோ அப்துல்ரஹ்மான் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நல்லகண்ணு, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், திருநாவுக்கரசர், கவிஞர் வைரமுத்து, பேரா.அருணன், காதர் மொய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது தாமதமாக வந்தார் திமுக பிரமுகர் துரைமுருகன். மேடையில் இருந்த ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வந்த துரைமுருகன், வைகோவிடம் வரும்போது அவரிடம் கைகுலுக்கியது மட்டுமின்றி கட்டியணைத்தது தனது பாசத்தை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத வைகோவும் நெகிழ்ச்சி அடைந்தார்.

வைகோ திமுகவில் பல ஆண்டுகள் இருந்தபோது அவரிடம் நெருக்கமாக இருந்த பல தலைவர்களில் துரைமுருகனும் ஒருவர். திமுகவை விட்டு வைகோ பிரிந்தபின்னரும் கூட அவரை நாகரீகமாக விமர்சித்தவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நட்பு கட்சி வேறுபாடுகளை கடந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மலையாள நடிகை பாலியல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உங்களை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க! காயத்ரியிடம் கண்ணீர் விட்ட ஓவியா

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் காயத்ரி மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பெஃக்ஷன் அறைக்கு சென்று பிக்பாஸ் அறிவுரையின்படி சமாதானம் ஆனார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

உனக்கு இதயமே இல்லையா? அலட்சியப்படுத்திய ஜூலிக்கு அட்வைஸ் செய்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நாளுக்கு நாள் எப்படி ஆதரவு அதிகரித்து வருகிறதோ அதேபோல் ஜூலி மீது நாளுக்கு நாள் வெறுப்பும் அதிகரித்து வருகிறது...

ஓவியாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காயத்ரி! ஜூலியின் நிலை என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஜூலி அல்லது காயத்ரி தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியும்...

ஃபெப்சியில் இல்லாதவர்களை கொண்டும் வேலை செய்யலாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி ஊழியர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்ச்னை பல சமயங்களில் முற்றி, படப்பிடிப்பையே நிறுத்தும் அளவுக்கு இருந்து வருகிறது...