கமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் பேட்டியின்போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியுள்ளார்.

கமலின் இந்த பேட்டி ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அமைச்சர்களில் சிலர் கமல்ஹாசனை ஒருமையிலும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கமல் எல்லாம் ஒரு ஆளே இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரை வீட தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக நடிகர் கமல் கூறியிருந்தார். மக்கள் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமலஹாசனை அமைச்சர்கள் சட்டத்தை காட்டி மிரட்டு கின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மைகளை திருத்தி கொள்வதே ஜனநாயக ஆட்சி, கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பது விமர்சிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல், நடிகரின் கமலின் கருத்தே தமிழக மக்களின் கருத்தாகும் என கூறினார்.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் பட நாயகி குறித்த தகவல்

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டம்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமைச்சர்களும் அவ்வப்போது கமல்ஹாசன் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அமைச்சர் கமல்ஹாசனை ஒருமையில் பேசிய சம்பவமும் நடந்தது.

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'வுக்கு என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறாததால் இந்த படம் கைவிடப்பட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் நோட்டீஸ்

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி நோட்டீஸ் அனுப்புவது கடந்த சில காலமாகவே ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு மலையாள நடிகை விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது.