close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  80% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெ.அன்பழகன் அவர்கள் கல்லீரல் பிரச்ச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.