திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு நேற்று சென்னையில் மட்டும் 1000ஐ தாண்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து நேற்று அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருள்களை ஜெ.அன்பழகன் அவர்கள் தானே நேரில் வழங்கி வந்தார் என்பதும், கொரோனா தொற்று அதிகமாக இருந்த பகுதிகளிலும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களோடு மக்களாக அவர் பழகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், அரசியலில் மட்டுமின்றி திரையுலகிலும் பிரபலமானவர் என்பதும், இவர் ஜெயம் ரவி நடித்த ‘ஆதிபகவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் ஒருசில படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்து நடிகர் பிரச்சன்னா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அவர் ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு

கவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

காமெடி அரசர் கவுண்டமணி நடிக்காத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலையில் ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி.

ஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது??? பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்!!! விரிவான தொகுப்பு!!!

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் மிணசோட்டா மாகாணம் மினியா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலக மக்களிடையே இனவெறி குறித்த கருத்துகளை விவாதிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா? ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.