பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எங்கே? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர். முதலில் நடிகர் ஸ்ரீ உடல்நலமில்லாத காரணத்தாலும், அடுத்து அனுயா மற்றும் கஞ்சா கருப்பு பார்வையாளர்களின் வாக்குகளை குறைவாக பெற்றதாலும் வெளியேறினர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள் அவரவர் வீட்டுக்குத்தான் செல்வார்கள் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சாகருப்பு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், அவருக்கென்று தனியறை ஒன்றை கொடுத்து பிக்பாஸ் சம்பந்தப்பட்ட வேலையை கொடுத்திருப்பதாகவும் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
100 நாள் கழித்தே தன்னால் வீட்டுக்கு செல்ல முடியும் என்றும் அதுதான் ஒப்பந்தம் என்றும் கூறிய கஞ்சா கருப்பு இதற்கு மேல் பேட்டியளிக்க முடியாது என்று கூறி போனை வைத்துவிட்டாராம். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதும், நடிகை அனுயாவும் இதேபோல் தனியறையில் தங்க வைக்கப்பட்டிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகம் கலவர பூமியாகும். மத்திய அமைச்சரே இப்படி மிரட்டுவதா?

ஒரு நாட்டின் மத்திய அமைச்சர் ஒருவரே தமிழகம் கலவர பூமியாகும் என்று மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'விஐபி 2' விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்? செளந்தர்யா

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை...

ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு வித்தியாசமான திருட்டு: 3 கிலோ நகைகள் கொள்ளை

பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹாலிவுட் பட ஸ்டைலில் 3 கிலோ நகைகளை ஒரு திருடன் கொள்ளையடித்துவிட்டு மாயமாகியுள்ளான். அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரவேட்டையில் உள்ளனர்...

பிஜி தீவில் வெங்கட்பிரபுவின் பிரமாண்டமான 'பார்ட்டி' ஆரம்பம்

'சென்னை 60002'8 படத்தின் 2ஆம் பாகத்தை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

மணிரத்னம் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது...