இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரே இடம் எது தெரியுமா???

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தனது முத்திரையைப் பதித்து விட்டது. இந்நிலையில் இந்தியாவின் ஒரே ஒரு யூனியன் பிரதேசத்தில் மட்டும் இன்னும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்த வில்லை. மற்ற யூனியன் பிரதேசங்களிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவை ஒட்டி காணப்படுகின்ற 36 குட்டிக் குட்டித் தீவுகளின் கூட்டம்தான் லட்சத்தீவு யூனியன். இப்பகுதியில் மொத்தம் 64 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாரையும் இதுவரை கொரோனா நோய்த்தொற்று பாதிக்க வில்லை. அதைத்தவிர, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாகலாந்தில் முதல் முறையாக நேற்று 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அந்த 3 பேரும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக நாகலாந்திற்கு சென்றவர்கள். அதேபோல சிக்கிம் மாநிலத்தில் கடந்த 23 ஆம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் டெல்லியில் இருந்து சிக்கிம் மாநிலத்திற்கு திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 348,319 ஆக பதிவாகி இருக்கிறது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத் தரவின்படி தற்போது இந்திய கொரோனா பாதிப்பில் உலகளவில் 10 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மொத்த நோய்தொற்று 146,371 ஆகவும் உயிரிழப்பு 4,187 ஆகவும் பதிவாகியிருக்கிறது. 

More News

கொரோனாவில் இருந்து குணமாகிய 26 வயது இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமான இந்திய இளைஞர் ஒருவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் மரணம்: விடுமுறை அளிக்கவில்லை என புகார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்ததால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த WHO!!! நடப்பது என்ன???

கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த மருந்தையும் உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்க வில்லை.

கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் மெத்தனம் காட்டினால் “அது இரண்டாவது உச்சத்தைக் காட்டிவிடும்” – WHO எச்சரிக்கை!!!

கொரோனா பரவல் எண்ணிக்கை உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது

மகன் தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தை மரணம்: கொரோனா தந்த அதிர்ச்சி

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது