close
Choose your channels

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் மற்றும் விரதமுறைகள் என்ன தெரியுமா?

Friday, March 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாம் தொடர்ந்து ஆன்மீக மற்றும் ஜோதிட விஷயங்களைப் பற்றிப் பேசி வருகிறோம். அந்த வரிசையில், 2025-ல் வரக்கூடிய பங்குனி உத்திரத்தைப் பற்றி ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் இங்கே.

பங்குனி உத்திரத்தின் சிறப்பு

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று எந்த நட்சத்திரம் இருக்கிறதோ, அதை வைத்து தான் அந்த பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் தை பூசம் என்றும், மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாசி மகம் என்றும் அழைக்கிறோம். அதேபோல, பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பங்குனி உத்திரம் என்று கொண்டாடுகிறோம்.

இந்த பங்குனி உத்திரத்திற்கு ஒரு சிறப்பு என்னவென்றால், பல கடவுள்கள் இந்த நாளில் தான் திருமணம் செய்து கொண்டனர். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டது இந்த பங்குனி உத்திர நாளில்தான்.

திருப்பரங்குன்றத்தில் இந்த பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடக்கும். நல்ல அன்பான கணவன்/மனைவி வேண்டுமென்று நினைப்பவர்கள் திருப்பரங்குன்றம் சென்று தேவயானையை வேண்டிக்கொள்ளலாம்.

சூரசம்ஹாரத்திற்குப் பிறகு தேவேந்திரன் முருகனுக்குத் தன் மகளாக வளர்த்த தேவயானையை திருமணம் செய்து கொடுக்கிறார். இந்த பங்குனி உத்திர நாளில்தான் அந்த திருமணம் நடந்தது.

பங்குனி உத்திரத்திற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது 12-வது மாதத்தில் 12-வது நட்சத்திரத்தில் வருகிறது. மேலும், ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்றாம் எண்ணாக குரு பகவான், சூரிய பகவான் மனையில் அமரக்கூடிய மாதம் இது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பிழம்பாகத் தோன்றி வளர்ந்த முருகப்பெருமான், மக்களுக்கு நன்மை செய்வதற்காக சுபகாரியம் செய்து கொண்ட அற்புதமான நட்சத்திரம் இந்த உத்திர நட்சத்திரம்.

இந்த பங்குனி உத்திர நாளில் யாரெல்லாம் விரதம் இருந்து முருகப்பெருமானை சேவிக்கிறார்களோ, அவர்களுக்கு திருமணம் கைகூடும்.

எப்படி விரதம் இருக்க வேண்டும்?

காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானை கந்த சஷ்டி, கந்த புராணம், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை படித்து வணங்க வேண்டும். எதுவும் படிக்க முடியவில்லை என்றால் முருகா முருகா என்று முழு நாளும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

முழு நாளும் உபவாசம் இருக்க வேண்டும். பால், பழம் சாப்பிடலாம். பழம் என்றால் வாழைப்பழத்தை உரித்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழத்தை இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்துவிட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

மாலை வேளையில் முருகனுக்குப் படையல் போட்டு, தனக்கு பிடித்த கணவன்/மனைவி வேண்டுமென்று வேண்டிக்கொண்டால், அடுத்த வருடம் இதே பங்குனி உத்திரத்திற்குள் திருமணம் நடந்துவிடும்.

எனவே, முருகப்பெருமான் காதல் கடவுளாகவும் இருக்கிறார். தனக்கு பிடித்த வாழ்க்கை துணை வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த பங்குனி உத்திரத்தில் விரதம் இருக்கலாம்.

சூழ்நிலை காரணமாக முதல் திருமணம் கசந்து போய் பிரிந்தவர்கள், அல்லது கணவன்/மனைவி யாராவது ஒருவர் இறந்து இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள், இந்த பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால், சித்திரைக்குள் அந்த இரண்டாவது திருமணம் சிறப்பாக நடந்து முடியும்.

பங்குனி உத்திரம் முடிந்து 48 நாட்களுக்குள் திருப்பரங்குன்றத்தில் முருகனையும் தெய்வானையையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது, அங்குள்ள கல்யாண விநாயகரை வணங்கி வந்தால், திருமணம் விரைவில் கைகூடும்.

ஒரு கிறிஸ்தவ பையனுக்கு 18 நாட்களுக்குள் திருமணம் நடந்த உண்மை சம்பவத்தையும் ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

உத்திர நட்சத்திரத்தின் நாயகனாக ஐயப்பனையும் சொல்வதால், அன்று ஐயப்பன் கோவிலுக்கு சென்று அவரை வணங்குபவர்களுக்கு மாமனால் ஏற்படக்கூடிய தொல்லைகள் நீங்கும்.

பங்குனி உத்திரத்தன்று காவடி எடுப்பவர்களின் பிறவி கடன் நீங்கும். ஏழ்மையில் வாடுபவர்கள், தலையெழுத்தை மாற்ற வேண்டுமென்று முருகனை வேண்டிக்கொண்டு காவடி எடுத்தால், அவர்களின் தலையெழுத்து மாறும்.

பரம்பரை சாபம் உள்ளவர்கள், அதாவது பரம்பரையில் பெண்கள் விதவையாகும் சாபம் உள்ளவர்கள், இந்த பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்தால், அவர்களின் தாலி பாக்கியம் நிலைக்கும்.

நாகதோஷம் உள்ளவர்கள், தனக்கு நல்ல கணவன்/மனைவி கிடைக்க வேண்டுமென்று சர்ப்ப காவடி எடுத்தால், அவர்களின் நாகதோஷம் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் தேவயானையை மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டு, திருச்சி வயலூர் முருகன் அல்லது எந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும், அதற்கான முறையான வைத்தியம் கிடைத்து, அந்த பிரச்சனை குணமடையும்.

பங்குனி உத்திரத்தன்று தேர் இழுக்கும்போது, விசிரி வாங்கி கொடுப்பவர்களுக்கு அதிகாரப் பதவியில் உள்ளவர்களுடன் நட்பு ஏற்படும். அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் உங்களை அதிகாரம் செலுத்தி வெல்ல முடியாது. உங்களுக்கும் அதிகார பதவி கிடைக்கும்.

மோர் தானம் செய்பவர்களின் வறுமை நீங்கும்.

கோவிலில் அங்கப்பிரசன்னம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்து பிரச்சனை தீரும்.

பங்குனி உத்திரத்தன்று செவ்வாழைப்பழம், மாதுளம்பழம் தானம் செய்தால், அப்பா அம்மாவுக்கு உள்ள இரத்த அழுத்தம் நோய் குறையும்.

இந்த பங்குனி உத்திரத்தன்று, தன் பிள்ளைக்காக, வீட்டுக்காரருக்காக, மனைவிக்காக, அப்பாவுக்காக, அம்மாவுக்காக என்று வேண்டிக்கொண்டு, அந்த உறவுகளை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளும் ஒரு அற்புதமான திருநாள்தான் இந்த பங்குனி உத்திர நாள்.

இந்த பங்குனி உத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கினால் இத்தனை சுகமும் கிடைக்கும்.

தொடர்ந்து மக்களுக்கு நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்வோம். தொடர்ந்து பேசலாம். நன்றி!Aanmeegaglitz Whatsapp Channel

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos