மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியில் குருக்ராம் என்ற பகுதியைச் சேர்ந்த சுர்ஜித்குமார் என்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார் இருவரும் இணைந்தே இந்த விவகாரத்து முடிவை எடுத்துள்ளனர் என்பதும், சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முதல் விசாரணை நடந்த போது இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனைவி மற்றும் மகள் இல்லாமல் தனிமையில் இருந்த டாக்டர் சுர்ஜித்குமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்தார். தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது மனைவிக்கு போன் செய்து 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர் விரைந்து வந்து டாக்டர் சுர்ஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் மகள் பிரிவை தாங்காமல் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நல்லவேளை டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: அதிர்ச்சி தகவல் 

சீனாவின் செயலியான டிக்டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த செயலியால் ஏராளமான இளம் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்காமல் தவறான பாதையில் செல்வதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்!!! அடுத்த அதிரடி!!!

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது

சென்னை மினி பாகிஸ்தானாக மாறுகிறதா??? வைரலாகும் பகீர் புகைப்படம்!!!

சென்னை மினி பாகிஸ்தானாக மாறிவருகிறது என்ற தகவலுடன் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் டிவிட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது.

முதலிரவிலேயே சந்தேகம் அடைந்த கணவர்: அதிர்ச்சியில் தீக்குளித்த மணப்பெண்

முதலிரவிலேயே சந்தேகமடைந்த கணவனால் அதிர்ச்சி அடைந்த புதுமணப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது