close
Choose your channels

ஓடிடி ரிலீஸிலும் சிக்கல்: சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின என்பதும் அவற்றில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படங்களும் உண்டு என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரியவில்லை என்பதால் மீண்டும் ஓடிடியில் நோக்கி தயாரிப்பாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ மற்றும் விஜய்சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஓடிடி உரிமையோடு சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து ஹாட்ஸ்டார் டீல் பேசி உள்ளதாக தெரிகிறது

ஆனால் ஏற்கனவே இந்த இரண்டு படங்களும் தயாரிப்பில் இருக்கும் போதே சன் டிவிக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டு விட்டதால் தற்போது இந்த திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் சன் டிவி சாட்டிலைட் உரிமையை திருப்பி கொடுக்க மறுத்து விட்டதால் இந்த இரு படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.