close
Choose your channels

3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ரைசாவுக்கு மருத்துவர் கெடு

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும் இதனையடுத்து அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மருத்துவர் பைரவிக்கு பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கறிஞர் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருவதாகவும் இதனை அடுத்து அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரைசா எனது நற்பெயரை கெடுக்க முயற்சிக்கிறார் என்றும் மருத்துவர் பைரவி குற்றஞ்சாட்டி உள்ளார்

நடிகை ரைசா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மருத்துவர் பைரவி அதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த கட்டமாக ரைசா மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.