ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மையா? மருத்துவர் பாலாஜி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது 'அம்மா இட்லி சாப்பிடுகிறார், இடியாப்பம் சாப்பிடுகிறார்' என்று அதிமுகவினர் இஷ்டத்திற்கு கதையளந்தனர். பின்னர் அவர்களில் சிலர் தாங்கள் கூறியது பொய் என்றும் பல்டி அடித்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இன்று டாக்டர் பாலாஜி ஆஜரானார். திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து விளக்கம் அளித்த டாக்டர் பாலாஜி பின்னர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விளக்கமளித்தார்
ஜெயலலிதாவுக்கு முழுக்க முழுக்க லண்டன் டாக்டர் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவே சிகிச்சை செய்ததாக கூறிய டாக்டர் பாலாஜி, சிகிச்சையின் ஆரம்பகட்டத்தில் இருந்தபோது ஜெயலலிதா நீராகராம் மட்டுமே எடுத்து கொண்டதாகவும் இட்லி போன்ற உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் மீண்டும் அவரை வரும் 27ஆம் தேதி ஆஜராகுமாறு கமிஷன் தலைவர் ஆறுமுகச்சாமி உத்தரவிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.