எமர்ஜென்ஸி அறையில் பணி நேரத்தில் போதையுடன் அரசு டாக்டர்

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

பொதுவாகவே ஒருசில அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் சரியாக பணி செய்வது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில் உபி மாநிலத்தில் உள்ள டாக்டர் ஒருவர் எமர்ஜென்ஸி அறையில் போதையில் உளறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொராடாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள எமர்ஜென்ஸி அறையில் போதையுடன் ஒரு டாக்டர் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் உளறினார். இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் உபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்டர் ஒருவரே பணியில் இருக்கும்போது போதையில் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

More News

மணல் கொள்ளையில் சம்பாதித்து திரைப்படம் தயாரித்த நடிகர் கைது

திரைத்துறையில் கணக்கில் வராத கருப்புப்பணம் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தின் மூலம் திரைப்படம் தயாரித்து, நடித்து வந்த நடிகர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்...

அஜித் இடத்தை ஒருசில மாதத்தில் பிடித்த விக்ரம்

தல அஜித் நடித்து வந்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 97% ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்ததாகவும் சென்னையில் வெறும் 3 சதவீதமே படப்பிடிப்பு நடந்ததாகவும் சமீபத்தில் இயக்குனர் சிவா பேட்டி அளித்திருந்தார்...

நயன்தாரா படத்தில் ஹாங்காங் சைக்கிள் ஸ்டண்ட் கலைஞர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்....

ஜூலியை ஏமாற்றிய ஸ்ரீ! பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 15 பேர்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார் என்பது விதிமுறைகளில் ஒன்று...

பிக்பாஸ் 4வது நாள்: ஓவியா-சினேகன் மோதலும் கட்டிப்பிடித்தலும்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசிலரின் வரவேற்பையும் பலரின் கேலி, கிண்டல்களையும் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது...