நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அதாவது நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டாக்டர் காந்தராஜ் தற்போது தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார், நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், இந்தப் பேட்டிக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் அளித்த பேட்டி, பல நடிகைகளின் மனதைப் புண்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன். எனது நோக்கம் யாரையும் காயப்படுத்துவதல்ல. எனினும், இந்தச் சம்பவத்திற்காக நான் மனமார மன்னிப்பு கேட்கிறேன்,” என்றார்.
முன்னதாக, நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “செப்டம்பர் 7-ம் தேதி, ஒரு யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், டாக்டர் காந்தராஜ், அனைத்து நடிகைகளையும் கீழ்த்தரமாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய விதம் நடிகைகளை கொச்சைப்படுத்தியது மட்டுமின்றி, அனைவரையும் பாலியல் தொழிலாளர்கள் என கூறியுள்ளார். ஆதாரமற்ற மற்றும் நாகரிகமற்ற வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார்," எனக் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments