பெண்ணின் கர்ப்பப்பையில் பைக்கின் உதிரிபாகம்! கணவர் கைது

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

பெண்ணின் கர்ப்பப்பையில் 6 இன்ச் அளவிற்கு பைக்கின் உதிரிப்பாகம் ஒன்று இருந்ததை அடுத்து அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அடிக்கடி கணவன், மனைவி இருவரும் கருத்துவேறுபாடால் சண்டை போட்டு வந்துள்ளனர். அந்த பெண்ணை அவருடைய கணவர் பல நேரங்களில் அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதன்படி ஒருநாள் நடந்த சண்டையில் அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய கணவர், ஆத்திரத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகியுள்ளார். இதனால் வலியால் துடித்தாலும், அந்த பெண் நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலியால் துடித்த அந்த பெண், மருத்துவமனையில் சோதனை செய்தபோது அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த 6 இன்ச் பகுதி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதன்பின்னர் தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் காவல்துறையினர்களிடம் கூறி புகார் செய்ய, போலீசார் அவருடைய கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய கர்ப்பப்பையில் இருந்த பைக்கின் உதிரிபாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

பணி முடிந்துவிட்டது: 'மிஸ்டர் லோக்கலை' ஒப்படைத்த இயக்குனர்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா! ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் செய்த புதிய முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.