கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அது இதயத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என கொல்கத்தாவில் உள்ள பி.எம் பிர்லா ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நோய் சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் பிர்லா ஆய்வு மைய மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 5 இல் ஒருவருக்கு சுவாசக் கோளாறு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் திம்மன் கஹாலி, கொரோனா பாதித்த நோயாளிகள் நெஞ்சு வலிப்பதாகக் கூறுகின்றனர். கொரோனா நோய்த்தொற்று நேரடியாக இதய அமைப்புகளை பாதிக்கிறது. இதனால் ஏற்படுகிற மார்புவலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் படிப்படியாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மேலும் சிக்கலாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 20 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு நெஞ்சு வலி போன்ற சிக்கல் இருப்பதகாவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெஞ்சுவலி, சுவாசக் கோளாறு போன்ற சிக்கல்கள் கொரோனாவின் உச்சத்தால் மாரடைப்பாகவும் மாறி பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

More News

வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான

ரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா?

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை-28' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் 'சத்தம் போடாதே' 'சரோஜா' 'பந்தயம்' 'முத்திரை' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார்.

ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத  விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றும் அதனை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கமல் பட நடிகை

கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று

லெபனான்: இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய செவிலியின் அசாத்தியம்!!! வைரலாகும் புகைப்படம்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.