பிளாஸ்டிக் முகக்கவசம் கொரோனா வைரஸை தடுக்காதா??? பீதியை கிளப்பும் புதுத்தகவல்!!!

 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் முகக்கவசம் உதவாது என்ற தகவலை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்பத்துவதில் நாம் பெரும்பாலும் முகக்கவசத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இந்நிலையில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் கொரோனா பரவலைத் தடுக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

பொதுவாக அறுவை சிகிச்சை முகக்கவசம் மற்றும் N95 மாஸ்குகள் மட்டுமே உரிய பாதுகாப்பைக் கொடுக்கக் கூடியது என விஞ்ஞானிகள் வலியுறுத்து கின்றனர். இந்த வகை முகக்கவசங்களைத் தவிர பிளாஸ்டிக்கால் செய்யப்படும் மாஸ்குகளையும் தொழிற்சாலை, மருந்தகம் போன்ற இடங்களில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தவகை மாஸ்குகள் தான் தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவாது எனக் கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் முகக்கவசங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானிகள் அதை சூப்பர் கம்பியூட்டரான ஃபுகாகுவோடு இணைத்து ஆய்வில் ஈடுபட்டதாகவும் அப்போது இந்த வகை முகக்கவசங்கள் கொரோனா வைரஸை நீர்த்துளிகளில் இருந்து கட்டுப்படுத்தவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் துகள்கள் பொதுவாகப் பாதிக்கப் பட்டவர்களின் நீர்த்துளிகளில் இருந்துதான் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பிளாஸ்டிக் முகக்கவசம் சுவாச உறுப்புகளில் பொருந்தி இருக்கும்போது குறைவான அளவிலேயே ஏரோசோல்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் 100% பாதுகாப்பை இந்தவகை முகக்கவசங்கள் தராது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் 50 மைக்ரோ மீட்டர் தொலைவில் உள்ள நீர்த்துளிகளில் இருந்து குறைந்தது 50% துகள்களை பிளாஸ்டிக் முகக்கவசம் கடத்துகிறது. இதனால் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என எச்சரித்து உள்ளனர். இதனால் பருத்துத் துணி மற்றும் அறுவைச் சிகிச்சை முகக்கவசம் மற்றும் N95 முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்தது எனக் கூறப்படுகிறது.

More News

குப்பையை பொறுக்கி சம்பாதித்த பணத்தில் தனக்கு தானே சிலை வடித்த சுவாரசிய மனிதர்!!!

சேலம் அருகே சாலையில் குப்பையைப் பொறுக்கி சம்பாதித்த பணத்தில் ஒருவர் தனக்கு தானே சிலை வடித்து இருக்கிறார்.

33 சிக்ஸர்கள், காணாமல் போன பல பந்துகள்: சிஎஸ்கே-ஆர்.ஆர் போட்டியின் சுவாரஸ்யங்கள்!

நேற்று சார்ஜாவில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம் 

ராஜஸ்தான் அடித்த 216 ரன்களில் 58 ரன்கள் இரண்டே ஓவர்களில்.. ஆச்சரிய தகவல்

நேற்று ஷார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 

நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு மிஸ் ஆனது ஏன்?

ஐபிஎல் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில்

ரிலீசுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தெரிந்ததே