தன் உயிரைத் தியாகம் செய்து எஜமானைக் காப்பாற்றிய செல்லப்பிராணி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கடித்து தன்னுடைய எஜமானருக்கு எச்சரித்து செய்திருக்கிறது ஒரு நாய். அதேசமயம் அறுந்து கிடந்த மின்சாரம் கம்பியில் இருந்து தாக்கிய மின்சாரத்தால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகமும் நடைபெற்று இருக்கிறது.

கோட்டயம் பகுதியில் விஜயன் என்பவர் அப்பு என்ற நாயை பல ஆண்டுகளாகச் செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடனே செல்வது அப்புவின் பழக்கமாக இருந்து இருககிறது. இந்நிலையில் நேற்று விஜயனின் மகன் அஜேஷ்(32) பக்கத்தில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றிருகிறார். போகும்போது அப்புவும் உடன் சென்றிருக்கிறது. அஜேஷ் செல்போனில் பேசிக்கொண்டே அசால்ட்டாக நடந்த சென்றிருக்கிறார்.

போகும்வழியில் ஒரு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து இருக்கிறது. இதைப் பார்த்த அப்பு வழியில் ஏதோ கிடக்கிறது என அதை வாயில் கவ்வி தூர வீசமுயற்சித்து இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அப்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அஜேஷ் தன்னுடைய உயிரை விட்டு என்னை காப்பாற்றி இருக்கிறானே இந்த அப்பு… என தேம்பி அழுதிருக்கிறார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட மின்சார ஊழியர்கள் மின்சாரக் கம்பியை சரிசெய்து இருக்கின்றனர்.

More News

மாட்டுக் கோமியத்தில் சானிடைசரா??? பரபரப்பு ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கிருமிநாசினி தன்மைக் கொண்டது என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் வலுவாக இருந்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஸ்பிரே!!! அசத்தும் புதிய கண்டுபிடிப்பு!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான களிம்பு ஒன்றை முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருந்தனர்.

இவர்களால் தான் இந்த உலகத்திற்கே ஆபத்து: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போது பேசினாலும் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் முதல் நபர் ஓவியா ஆகதான் இருக்கும். முதல் சீசனில் ஓவியா போட்டியாளராக கலந்து கொண்டாலும்

நிறைவேறாமல் போன வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை: நண்பர் உருக்கம்

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று காலமான செய்தி சின்னத்திரை மற்றும் பெரியதிரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்

வடிவேல் பாலாஜியை அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன்: பிரபல இயக்குனர் 

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி சின்னத்திரை ரசிகர்களை மட்டுமின்றி பெரிய திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.