கமலின் 'விஸ்வரூபம்' குறித்து கருத்து கூறிய பாமக ராம்தாஸ்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவருடைய டுவீட்டில் அரசியல் இருக்கும். சிலசமயம் அரசியல்வாதிகளை மறைமுகமாக நையாண்டி செய்தும் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்திருப்பார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் நேரடியாகவே அரசியல்வாதிகளை தாக்கி வருகிறார். அவருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் நடந்த டுவிட்டர் போர் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ஜிஎஸ்டி பிரச்சனை குறித்து கமல் கருத்து தெரிவித்தபோது, "தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது என்றும் தமிழகம் ஊழலில் பிகாரையே விஞ்சிவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
கமலின் இந்த கருத்து குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தனது சமூக வலைத்தளத்தில், 'ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள்! என்று கூறியுள்ளார். ராமதாசின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் பாராட்டியும், கிண்டல் செய்தும் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

வைக்கம் விஜயலட்சுமிக்கு அமெரிக்க பல்கலை தந்த கெளரவம்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பல படங்களில் பாடியுள்ளார். குக்கூ, பட்டதாரி', 'என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி, தெறி, உள்பட பல திரைப்படங்களில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி' படத்தில் இடம்பெற்ற ‘யாரு இவன் யாரு இவன்’ என்ற பாட&#

திரையுலகிற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றை எதிர்த்து உண்மையில் மக்கள் தான் போராட வேண்டும். எந்த வரி போட்டாலும் அதை கட்டபோவது மக்கள் தான்.

வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் ஐடி ஊழியர்

கடந்த சில மாதங்களாகவே ஐடி ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மைசூரில் ஒரு பெண் ஊழியர் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மென்மொருள் மூலம் போலி ஏடிஎம் கார்டு. லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது

இன்றைய டெக்னாலஜி உலகில், எந்த பொருளை வாங்கினாலும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் ஸ்வைப் செய்வது சர்வசாதாரணமாகி வருகிறது.

வேலைநிறுத்தம் வாபஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில் நேற்று இதுகுறித்து தமிழக அரசுடன் திரையுலக பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வ