close
Choose your channels

இளம் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை… நாகையில் நடந்த பயங்கரம்!!!

Friday, January 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஷ்மீர், உத்திர பிரதேசத்தை அடுத்து கோயிலுக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தமிழகத்திலும் தொடர்ந்து இருக்கிறது. நாகை மாவட்டத்தில் கணவனை இழந்த இளம் பெண்ணுக்கு இந்த பயங்கரம் நடைபெற்று இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கட்டிட வேலைக்கு சென்று விட்டு திரும்பிய இளம் பெண்ணை இளைஞர்கள் வழிமறித்து கோவிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நகை மாவட்டத்தின் நாகர் தோப்பு பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வரும் இளம் பெண் ஏற்கனவே கணவரை இழந்து உள்ளார். இதனால் தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு காமராஜர் காலனியில் உள்ள தன்னுடைய சகோதரியின் வீட்டிற்குத் திரும்பி சென்றிருக்கிறார். அப்போது அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து அவருடைய கூலிப் பணத்தை மிரட்டி பிடுங்கி உள்ளனர்.

மேலும் அவரை காமராஜர் காலனி பகுதியில் உள்ள கோயிலுக்குள் இழுத்துச் சென்ற அந்த இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கோர விபத்தில் இருந்து வீடு திரும்பிய அந்தப் பெண்ணின் வீட்டிற்கும் அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.