close
Choose your channels

தைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உண்மையை தைரியமாக பேசுபவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சர்ச்சைக்குரிய படம் என்று கூறப்படும் திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடந்ததையும் பத்திரிகையில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான் அந்த கருத்தை கூறியதாகவும் ரஜினிகாந்த் நேற்று பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியை அடுத்து ரஜினிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு மற்றும் எதிர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய படம் என்று கருதப்படும் திரௌபதி என்றா படத்தை இயக்கிய மோகன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறிய போது ’நடந்த உண்மையை தைரியமாக பேசினால் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மோகனின் இந்த கருத்துக்கு சமூக வலைதள பயனாளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos