close
Choose your channels

அழைப்பை ஏற்று 'திரெளபதி' படத்தை பார்ப்பாரா பா ரஞ்சித்?

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஜி.மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ’கன்னிமாடம்’ படத்தை பார்த்து ஆணவ கொலைகள் குறித்து தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த பா.ரஞ்சித், ’திரெளபதி’ படத்தையும் பார்க்க வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ’திரெளபதி’ படத்தின் தயாரிப்பாளர் கோபி அவர்கள் டுவிட்டர் மூலம் ’திரெளபதி’ படத்தை பார்க்க பா.ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ’திரெளபதி’ திரைப்படத்தை பார்க்க ரஞ்சித்தை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அவரை அணுக முடியவில்லை எனவும், எனவே அவரை டுவிட்டர் மூலம் அழைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் சமம் என்று அம்பேத்கர் கூறியதை பா.ரஞ்சித் நம்புவார் என்றால் ’திரெளபதி’ படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ’திரெளபதி’ படத்தின் இயக்குனர் ஜி மோகன் இந்த டுவிட்டை மறுட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’திரெளபதி’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அழைப்பை ஏற்று பா.ரஞ்சித் இந்த படத்தை பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.