குடிபோதை...! வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

குடிபோதையில் பெண் காவல் ஆய்வாளரை திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வருபவர்கள் குறித்து, தீவிரமாக கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் துறையினர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலூர் வட்டம், அவிநாசி பாளையத்தில், காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திமுக பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி குடிபோதையில், நண்பர்களுடன் காரில் வந்துள்ளார். காரை நிறுத்தி பரிசோதனை செய்த காவல்துறையினர், மாஸ்க் ஏன் அணியவில்லை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஏன் கடைபிடிக்கவில்லை என ரவியிடம் விசாரித்தனர்.

அப்போது குடிபோதையில் பேசிய ரவி, நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம் கேஸ் போடறதுனா போட்டுக்கோ என வேட்டி அவிழ்ந்தது கூட, தெரியாமல் பெண் காவல் ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். நண்பர்கள் அவரை சமாதானப்படுத்த, அவர்களை கெட்டவார்த்தையில் திட்டியுள்ளார் ரவி. இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று காரில் உட்கார வைத்துள்ளனர் நண்பர்கள். திமுக பிரமுகர் பெண் காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்!

கொரோனா பேரிடரால் இந்தியாவே நிலைக் குலைந்து போய் இருக்கிறது

நீராவி கொரோனாவை கட்டுப்படுத்துமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் பெற்று இருக்கிறது.

இந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…

கொரோனா நேரத்தில் இளசு முதல் பெருசு வரை செல்போனை வைத்துக் கொண்டே அலைந்து வருகிறோம்.

'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது

அருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி!

இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களும் அவருடைய மனைவி சிந்துஜா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த