close
Choose your channels

ஆண் நண்பருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் தற்கொலை!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆண் நண்பருடன் லிவ்விங் டு வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உள்ள ஆலப்புழா அருகே வசித்து வந்தவர் ரூபி பாபு. 35 வயதாகும் இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 45 வயதான ஆண் நண்பர் சுனில் என்பருடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ரூபி பாபு தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதை சிறிது நேரம் கழித்து பார்த்த அவருடைய ஆண் நம்பர் சுனில் அதிர்ச்சி அடைந்து தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர் ஒருவருக்கு போனில் தகவல் கூறிவிட்டு கூறியுள்ளார்.

அந்த நண்பர் அதிர்ச்சி அடைந்து போலீசாருடன் அவருடைய வீட்டை வீட்டிற்கு சென்று பார்த்தபோது கீழ்தளத்தில் ரூபியும், முதல் மாடியில் சுனிலும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டனர். இதனையடுத்து இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இரண்டு பேருமே எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos