விக்ரமின் 'கோப்ரா': இன்று முதல் அடுத்தகட்ட பணி ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை அடுத்து, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

More News

பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார்

கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா? இறக்குடா பிளைட்டா? சூரரை போற்று டிரைலர்

'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தடையில்லா சான்றிதழ் தாமதமாக வந்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது