டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு?

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராதாரவிக்கு எதிராக போட்டியிட்ட சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சின்மயி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மற்ற பதவிகளுக்கு திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் சின்மயியின் ‘ராமராஜ்யம்’ அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரிந்ததே.

More News

ஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன.

கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..! 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.  

சுற்றுச்சூழல் பிரச்சாரம் - அண்டார்டிக்காவின் உருகும் பனிப்பாறைகளுக்கு நடுவே ஒரு நீச்சல் பயணம்

ஒரு ஆய்வில் கீரின்லாந்தில் பனிப்பாறைகளின் உருகும் தன்மை அதிகரித்து விட்டதை கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்

மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

படப்பிடிப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருமான வரித்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.

. 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.