close
Choose your channels

கொரோனாவால் கார்த்தி படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து தொழிலும் முடங்கி உள்ளது போல் திரையுலகமும் கிட்டத்தட்ட முடங்கும் நிலைக்கு வந்து விட்டது. இந்த நிலையில் கார்த்தி நடித்து கொண்டு இருந்த ’சர்தார்’ திரைப்படத்திற்காக போடப்பட்ட இரண்டு கோடி ரூபாய் செட் தற்போது பயன்பாடு இல்லாமல் இருப்பதால் படக்குழுவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான செட் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

இந்த செட்டில் பல முக்கிய காட்சிகள் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்து இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூபாய் 2 கோடி செலவு செய்து அவசர அவசரமாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான செட் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலை உள்ளது. ஏற்கனவே கார்த்தி நடித்துவரும் ’பொன்னியின் செல்வன் திரைப்படமும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.