close
Choose your channels

மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்க கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல் காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை சென்னை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் புயல் காரணமாக கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் மரங்கள் சாய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி நாளை இரவு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் கரையை கடக்கும் என்பதால் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.