close
Choose your channels

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

Saturday, February 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு மித்தேஸ்குமார் என்பவர் வந்ததாகவும், மற்ற அதிகாரிகள் வந்தவுடன் ரெய்டு ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது

இருப்பினும் மித்தேஸ்குமார் மீது சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்துவந்து அந்த அதிகாரியிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினார். இந்த நிலையில் திடீரென அந்த அதிகாரி சுவர் ஏறி குதித்து போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டார். போலீசாரும் சுவர் ஏறி அந்த நபரை விரட்டினர். ஆனால் அந்த மர்ம ஆசாமி மாயமாய் மறைந்துவிட்டார். இதன்பின்னர்தான் அவர், போலி வருமான வரித்துறை அதிகாரி என்றும் அவர் கொண்டு வந்த ரெய்டு ஆணையும் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் தீபா வீடு அருகே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.