close
Choose your channels

ரஜினியின் 'வெற்றிடம்' கருத்துக்கு திமுக பிரமுகர் பதிலடி!

Friday, November 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு ஆளுமையுள்ள தலைவர்களின் மறைவிற்கு பின்னர் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக ரஜினிகாந்த் ஏற்கனவே பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். இன்றைய பேட்டியின்போது ஒரு நிருபர், ‘தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். அடுத்த முதல்வர் பதவிக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் தயாராக உள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘தமிழகத்தில் இன்னும் ஆளுமையுள்ள சரியான இடத்திற்கு வெற்றிடம் இருக்கின்றது’ என்று பதிலளித்தார். இந்த பதில் இன்றைய அரசியல் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் ‘வெற்றிடம்’ குறித்த கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் பதிலளித்தபோது, ‘வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று கூறினார்

வழக்கம்போல் ரஜினியின் கருத்துக்கும், துரைமுருகனின் பதிலுக்கும் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்டுக்களை அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.