கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயங்கள் புத்தாண்டு பரிசாக, லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி..!

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

தமிழ்நாடு மின்வாரியத்தில், வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராக நந்தகோபால் என்பவர் உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதற்கான தலைமை அலுவலகம், வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ளது.

இந்தநிலையில், தலைமைப் பொறியாளர் நந்தகோபால் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனக்குக்கீழ் நிலையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி நகை, பணத்தைப் பரிசு பொருள்களாகப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உட்பட 9 பேர் அடங்கிய குழுவினர் காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நேற்று மாலை 5 மணியளவில் அதிரடியாக நுழைந்தனர்.

மாளிகை முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 48 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1,53,000 ரொக்கப் பணம், வெள்ளி டம்ளர்கள், குங்குமச் சிமிழ், பண்டல் பண்டல்களாகப் புது ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. பரிசுப் பொருள்களை லஞ்சமாக வாங்கிக் குவித்த மண்டல தலைமைப் பொறியாளர் நந்தகோபால் மற்றும் பரிசுப் பொருள்களை வசூலித்துக் கொடுக்க வந்த அதிகாரிகள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியது, நந்தகோபால் உட்பட மேலும் சில அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும். தலைமைப் பொறியாளர் பதவியில் உள்ள நந்தகோபால் இன்னும் 7 மாதங்களில் பணி ஓய்வுபெறுகிறார். அதனால்தான், லஞ்சம் வாங்கிக் குவிக்க முடிவுசெய்துள்ளார்’ என்றனர்.

More News

திருமணம் நடந்தபோது மணமகளின் படுக்கையறை காட்சியை திரையிட்ட மணமகன்: அதிர்ச்சி தகவல்

திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகளின் படுக்கை அறை காட்சியின் வீடியோவை மணமகனே திரையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

தொண்டையில் சிக்கியில் பஜ்ஜி! சென்னை பெண் பரிதாப மரணம்!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்ட போது அந்த பஜ்ஜி தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

5 மொழிகளில் உருவாகும் பிரபல வில்லன் நடிகரின் படம்

ஹீரோ, வில்லன் என தமிழ் திரையுலகில் வலம் வந்த நடிகர் ஜீவன், காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு முன்பே சோழர் வேடத்தில் விக்ரம்: ஒரு அபூர்வ ஒற்றுமை

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி பட இயக்குனரின் சகோதரர் வெற்றி!

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.