close
Choose your channels

சென்னை அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாகவும் சென்னையில் இருந்து சுமார் 600 கிமீ தூரத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

இன்று காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாகவும் இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த ஆபத்தும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பதால் மக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.