குறைவாக சம்பளம் கொடுத்ததால் திருடினேன்.. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி வாக்குமூலம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததால் தான் திருடினேன் என்றும் தான் திருடுவதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் கவனக்குறைவு தான் என்றும் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஈஸ்வரியை தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்கள் வேலை செய்கிறார்கள், நான் மட்டுமே பெண், அதனால் ஐஸ்வர்யா தன்னை நெருக்கமாக வைத்துக் கொள்வார் என்றும் அதனால் நான் ஐஸ்வர்யா நகைகளை எங்கே வைப்பார்? லாக்கர் எங்கே இருக்கிறது? லாக்கர் சாவி எங்கே இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்றும் கூறினார்.

முதலில் கொஞ்சம் நகைகளை மட்டும் திருடினேன் என்றும் ஆனால் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள யாருமே அதை கண்டு பிடிக்கவில்லை என்பதால் அடுத்தடுத்து நகைகளை அதிகமாக திருடினேன் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் ஐஸ்வர்யா தான் தன்னை திருடத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா தனக்கு மாதம் 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் கொடுத்ததாகவும் அந்த சம்பளம் தனது போதவில்லை என்பதால் தான் அவரது வீட்டில் திருடினேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் மாதம் 30 ஆயிரம் என்பது குறைவான சம்பளமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

நியூஸ் ரீடர் கண்மணியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..!

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

பைக், கார்களுக்கு பதில் வித்தியாசமான பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. உதவி இயக்குனர்கள் மகிழ்ச்சி..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் பைக், கார் வாங்கி கொடுப்பார் என்பதும் அதேபோல் இயக்குனர் தங்களது

தனுஷ் பாடலுடன் 'நாட்டு நாட்டு' பாடலை ஒப்பிட்ட எம்.எம்.கீரவாணி: எந்த பாடல் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே

'PS 2' இசை வெளியிட்டு விழாவில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ளும் பிரபல நடிகர்: ஆச்சரிய தகவல்

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

மனைவி, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் நடிகர் செந்தில்.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில் என்பதும் இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்