close
Choose your channels

மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Wednesday, July 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில எம்எல்ஏக்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மின் துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும், இதனால் அவர் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் தற்போது நடைபெற்று வரும் முதலமைச்சர் மற்றும் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் சந்திப்பில் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை. மேலும் தங்கமணி அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos