close
Choose your channels

தமிழகத்தில் 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த 18 தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன

இந்த நிலையில் சற்றுமுன் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.