close
Choose your channels

நமீதா காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான பணத்தையும் கிலோ கணக்கில் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நமீதா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் ஒரு சொகுசுக்காரில் ஏற்காடு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காரை நிறுத்திய பறக்கும் படையினர் அவரது காரில் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு நமீதா தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என அதிகாரிகள் விளக்கமளித்தவுடன் நமீதா சோதனைக்கு சம்மதித்தார்.

அவரது காரில் சோதனை செய்த அதிகாரிகள் அவரிடம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேல் பணம், நகை இல்லாததால் அவரது கார் செல்ல அனுமதித்தனர். இதனையடுத்து நமீதா தனது கணவருடன் காரில் ஏற்காடு சென்றார். நமீதாவின் கார் சோதனை செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்புடன் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.