குடும்பத்துடன் வந்து வாக்களித்த எடப்பாடியார்...!

வாக்களிக்கும் இடம் வரை தனது பேரனை அழைத்து சென்று, எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், இன்று அதிகாலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்து வருகிறார்கள். கொரோனா தீவிரமாக இருப்பதாலும் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்களிக்கிறார்கள். ஓட்டுப்போடும் நபர்களுக்கு, சானிடைசர் கொடுக்கப்பட்டு, கையுறையும் வாக்குச்சாவடியில் தரப்படுகிறது. இதன்பின்பு தான் வாக்குச்சாவடிக்குள் அவர்கள் அனுமதிக்கிறார்கள். இன்று காலையிலிருந்தே அரசியல் தலைவர்கள் ஸ்டாலின்,சீமான், உதயநிதி உட்பட பலரும் வாக்களித்தனர். நடிகர்கள்,விஜய்,சூர்யா மற்றும் அஜித் குடுபத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்நிலையில் அதிமுக-வின் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரான பழனிச்சாமி அவர்கள், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் சென்று வாக்களித்தார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்த எடப்பாடியாருடன் மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் உடனிருந்தனர். வாக்குச்சாவடிக்குள் தனது பேரனை எடுத்துச்சென்ற முதல்வர் ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் அனைவரும் கடமையை தவறாமல் செய்ய வாக்களியுங்கள் என்று கூறினார்.

More News

கொரோனவால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் எப்படி இருக்கிறார்? அவரே பதிவு செய்த டுவிட்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

சைக்கிளில் வந்ததன் காரணம் என்ன? விஜய் தரப்பு விளக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் வாக்களித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நடந்து சென்ற விக்ரம் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு: என்ன பிரச்சனை?

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்

சைக்கிளில் வந்து வாக்களித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், நடிகர் சூர்யா கார்த்தி உள்பட பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

செல்பி எடுத்த நபரின் போனை பிடுங்கிய அஜித்: வைரல் வீடியோ

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் 6.30 மணிக்கே திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து விட்டார்